செயற்கை நுண்ணறிவு நிலையத்தை நிறுவும் சட்டங்கள் விரைவில் – ஜனாதிபதி
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிலையத்தை உருவாக்கும் சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.