பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை நாளை !!

2023 உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை நாளை (19) முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 பரீட்சை நிலையங்களில் இந்த செயன்முறை பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் அனுமதி அட்டையில் பரீட்சைக்கு தோற்றும் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த திகதி மற்றும் இடம் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *