கைதானவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்கும் வடக்கு, கிழக்கு பிரதிநிதிகள் !!

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாட வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

நாளை மறுதினம் (18) நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்டவர்ளை விடுவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *