முதலில் ஜனாதிபதித் தேர்தல் : அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்யுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர்களிடம் நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை கூடிய விரைவில் முடிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *