அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்: மஹிந்தானந்த

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக அங்கீகரிக்க வாக்களிக்காமல் விலகிய அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், உறுதியான தீர்மானத்திற்கு வர முடியாத அந்த இரண்டு உறுப்பினர்களும் அரசியலமைப்பு சபையில் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் இப்போது நடந்துகொள்வது போல் தொடர்ந்தும் நடந்து கொண்டால், அதனை கலைக்க வேண்டும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *