வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய் : மூதூரில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் சமய வழிபாட்டின்போது இடம்பெற்ற சம்பவங்களை கண்டித்து மூதூரில் இன்று (18) போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக நீதி தேவை எனவும் கைது செய்யப்பட்ட 8 பேரை விடுதலை செய்யக் கோரியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ஏற்பாடு செய்த இந்த போராட்ட பேரணி மூதூர் பேருந்து நிலைய வீதியில் இருந்து பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலாளரிடம் மனுவும் கையளிக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் சிவில் சமூகம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்ட அதேநேரம் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்க நினைக்க கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *