வெடுக்குநாறி பூசகர் வைத்தியசாலையில் !!

சிறையில் உண்ணாவிரதமிருந்து விடுதலையான வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த எட்டுப்பேரும் நேற்று முன்தினம் வவுனியா நீதிமன்றம் விடுதித்தது.

இந்நிலையில் விடுதலையான பூசகர் சுகவீனமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவர் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 5 நாட்கள் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *