ஜனாதிபதி மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டது !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட இந்த சந்திப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி இன்று அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் அதற்கான நேரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், நாளை மறுதினம் முற்பகல் 11.30க்கு குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *