நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : 646 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் மூவாயிரத்து 646 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டாயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியான காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் 2,813 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 949 பேரும், பதுளை மாவட்டத்தில் 190 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் கிளிநொச்சியில் கடந்த வாரம் வீசிய பலத்த காற்று காரணமாக வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *