வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் !!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஆயிரத்து 536 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் பணம் ஆயிரத்து 432 மில்லியன் டொலர்கள் என்றும் கூறியுள்ளது.

இதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 89.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.

சுற்றுலா வருகையின் மூலம் கிடைத்த வருவாய் ஆயிரத்து 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *