குடிபோதையில் குழப்பம் – யாழில் இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர்கள் 7 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இசைநிகழ்வில் போதையில், குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பரிசோதனையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *