தலைவர் பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தலைவரை தமிழ்மக்கள் அடையாளம் காணவில்லை – சார்ள்ஸ் எம்.பி.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தலைவரை தமிழ் மக்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு உட்பட மலையகம் கொழும்பில் உள்ள தமிழர்கள் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக ஆர்வமற்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *