பொது மன்னிப்பின் அடிப்படையில் பல சிறை கைதிகள் விடுதலை !!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து பொது மன்னிப்பின் அடிப்படையில் பல சிறைக் கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் 7 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதேநேரம் வவுனியா சிறைச்சாலையில் இருந்த 10 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 16 சிறைக்கைதிகள் நேற்று காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்துக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தும் 59 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் 779 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *