இரண்டு தேர்தலையும் ஒரே நாளில் நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இரண்டு தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சிலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதேசபயம் ஜனாதிபதித் தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வாக்குச் சீட்டே அச்சிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *