சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்ட தீர்மானம் குறித்து ஆராய்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராயவுள்ளது.

சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் நேற்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கொழும்பு நடைபெற்றது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் உப தலைவருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவில் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய நியமனங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று பிற்பகல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானங்களை துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில் கட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி கூடி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *