இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் மதராம் தொடரும் நிலையில் இஸ்ரேலிய விமான சேவை நிறுவனங்கள் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடிய பின்னர் திகதியை தீர்மானிக்குமாறும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *