கீரிமலையில் காணி சுவீகரிப்புத் தடுக்கப்பட்டது !!

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் இன்று (26) காலை நடைபெறவிருந்த அளவீட்டுப்பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

வலி வடக்கு கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் காலை 10 மணிக்கு குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு வந்த நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தினை இடைமறித்து நீண்ட நேரம் காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என தெரிவித்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *