2வது இருபதுக்கு 20 போட்டி : இந்திய அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளில் மோதும் இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தடியாது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துப்பாட்டத்தில் குஷால் பெரேரா ஆட்டமிழ்க்காமல் 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதேநேரம் பெத்தும் நிஷங்க 32 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக Arshdeep Singh மற்றும் Ravi Bishnoi ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனை தொடந்து 20 ஓவர்கள் நிறைவில் இலன் குகை அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதனால் இந்திய அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கபட்டது.