மஹேல ஜெயவர்தன இராஜினாமா !!

இலங்கை கிரிக்கெட்டின் பயிற்றுவிப்பு ஆலோசகராக கடமையாற்றிய மஹேல ஜெயவர்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த பதவிக்காலத்தின் போது மஹேல ஜெயவர்த இலங்கை அணிக்கு செய்த பல்வேறு பங்களிப்புகளை இலங்கை கிரிக்கெட் சபை நினைவுகூர்ந்துள்ளது.

அவரது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மஹேல ஜெயவர்தனவின் இந்த இராஜனாமா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை அவரது எதிர்கால நடவடிக்கைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது.