2024 லிங்க பிரிமியர் லீக்கிற்கான வீரர் பதிவு தொடங்கியது

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாக வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்ய முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள், அறிமுகமாகாத வீரர்கள் என்ற இரு பிரிவுகளின் கீழ் வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்ய முடியும்.

அதேநேரம் ஓய்வுபெற்ற இலங்கை வீரர்கள் விளையாட முடியும் என்றும் குறிப்பாக சர்வதேச லீக் போட்டிகளில் பங்கேற்கும் முன்னாள் வீரர்களும் பங்கேற்க்க முடியும்.

வீரர்கள் தங்களுடைய பெயர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 12 மணிக்கு முன்னர் இலங்கை கிரிக்கட் சபையின் இணையத்தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.