இலங்கை – இந்திய அணிகளுக்கிடையலான முதல் ஒருநாள் பரபரப்பான போட்டி சமநிலையில் நிறைவு!

இலங்கை மற்று இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, சமநிலையில் நிறைவடைந்துள்ளது

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்திப் சிங் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 231 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணியால், 47.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 58 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் 33ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணி சார்பில், 67 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய துனித் வெல்லாலகே தெரிவுசெய்யப்பட்டார்.