ஆசியக்கிண்ணம் : மந்தனா அதிரடி : 165 ஓட்டங்களை பெற்றது இந்திய மகளிர் அணி

2024 ஆம் ஆண்டுக்கான மகளிருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இலங்கை, இந்திய அணிகள் மோதும் இருத்தி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்திடை தெரிவு செய்து களமிறங்கியது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இதேநேரம் ரிச்சா கோஷ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் 166 ஓட்டங்கள் வெற்றி என்ற இலைக்கோடு இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.