பாகிஸ்தானை 3 விக்கெட்டால் வீழ்த்தி இலங்கை அணி த்ரில் வெற்றி !!

இந்தியாவுக்கு எதிரான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 3 விக்கெட்டால் வீழ்த்தி இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் இலங்கை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இலங்கை அணி, நடப்பு சம்பியனான இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து 141 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.

இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து சிறப்பாக துடுப்பெடுத்தடி 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகியாகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார்.

பாகிஸ்தானை 3 விக்கெட்டால் வீழ்த்தி இலங்கை அணி, நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் , நடப்பு சம்பியனான இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *