22வது திருத்தம் வர்த்தமானியில் !!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் அரசியலமைப்பின் 22வது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு மேல் என்ற வார்த்தைகளை ஐந்தாண்டுகளுக்கு மேல் என மாற்றுவதன் மூலம் 83 ஆவது சரத்தின் பி பிரிவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வரைவை வர்த்தமானியில் வெளியிட வேண்டாம் என அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பான நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *