வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு : மேலதிக வீரராக வியாஸ்காந்த் !!

2024 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

குதிகால் காயம் காரணமாக 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை தவறவிட்ட வனிந்து ஹசரங்க உலகக்கிண்ண இலங்கை அணிக்கு தலைமை தாங்குகின்றார்.

இலங்கையில் நடந்து வரும் பயிற்சி போட்டிகளில் கூட துடுப்பாட்டத்தை மட்டுமே மேற்கொண்டிருந்தார். மேலும் எந்த போட்டியிலும் அவர் பந்து வீசவில்லை.

T20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷ், நேபாளம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளோடு டி பிரிவில் இலங்கை அணி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் ஜூன் 3 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நியூயோர்க்கில் முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணிக்கு சரித் அசலங்க உதவி அணித்தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும் இந்த அணியில் குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனக, தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன, நுவான் துஷார, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியிருந்த யாழ் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மேலதிக வீரராக பெயரிபட்டுள்ளார். அவரோடு அசித்த பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே ஆகியோரும் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=vjL7DhsFGug

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *