சீகிரியா, தம்புள்ளை சுற்றுலா வலயம் : விரைவுபடுத்துமாறு அமைச்சர் பிரசன்ன பணிப்பு

சீகிரியா, தம்புள்ளையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுக்குமாறு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த திட்டங்களை மூன்றாம் காலாண்டுக்குள் பூர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இத்குரிய வசதிகளை வழங்க நிதியமைச்சு குழுவொன்றினை நியமித்துள்ள அதேநேரம் இந்த திட்டம் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவோடு 30 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சீகிரியா, தம்புள்ளை, திருகோணமலை நகரங்களில் அடையாளம் காணப்பட்ட இடங்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி என்பன இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.