கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிக்க நடவடிக்கை !!

யுக்தியை நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்களை அழிப்பதற்கு புத்தளம் மாவட்டத்தில் இடம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல், குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *