32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப அணி நாளை முதல் பயிற்சியில் !!

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான 32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப அணியை உபுல் தரங்க தலைமையிலான தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.

இந்நிலையில் அணியில் இடம்பெற்றுள்ள 32 வீரர்களும் நாளை முதல் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். தொடருக்காக ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்ட யாழ் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தும் காயம் காரணமாக தேசிய அணியில் இடம்பெறாத பானுக ராஜபக்சவும் 32 வீரர்களில் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள மதீஷ பத்திரன, மகேஷ் தீக்ஷன, நுவான் துஷார, துஷ்மந்த சமீர, வியாஸ்காந்த் ஆகியோர் டி-20 போட்டிகளிலும் பயிற்ச்சி போட்டிகளிலும் விளையாடுவதற்காக நாடு திரும்புவார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அனுபவம் வாய்ந்த வீரர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், குசல் பெரேரா ஆகியோரும் சமீர, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க, அசித பெர்னாண்டோ ஆகிய மூத்த வீரர்களோடு வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, சாமிக கருணாரத்ன, பிரமோத் மதுஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பந்துவீச்சு சகலத்துறை வீரரான துனித் வெல்லலகே, லஹிரு மதுஷங்க, சஹான் ஆராச்சிகே ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்களான அகில தனஞ்சய, ஹசரங்கவுடன் ஜெப்ரி வான்டர்சே ஆகியோரும் 32 பேர் கொண்ட அணியில் உள்ளனர்.

ஜூன் இரண்டாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அமெரிக்காவிழும் மேற்கிந்தியத் தீவுகளிலும் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடர் நடைபெறவுள்ளது.

32 பேர் அணி விபரம்

வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியானகே, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, துனித் வெல்லலகே, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், மகேஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, லஹிரு குமார, லஹிரு மதுஷங்க, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார, ஜெப்ரி வான்டர்சே, விஜயகாந்த் வியாஸ்காந்த்