நடப்பு ஐ.பி.எல். தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் !!

நடப்பு ஐ.பி.எல். தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் உள்ளார்.

இதனால் எஞ்சிய போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது என இலங்கை கிரிக்கெட் சபை இந்திய கிரிக்கெட் சபைக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிகிச்சைக்காக டுபாய் சென்ற வனிந்து ஹசரங்கவிற்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் வனிந்து ஹசரங்கவிற்கு பதிலாக விளையாடவுள்ள வீரர் குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் வனிந்து ஹசரங்கவை 1.5 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் வாங்கியது.

இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு 10.75 கோடி ரூபாய் ஏலத்தில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை வாங்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *