ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்த ஜி.எல் பீரிஸ் உள்ளிட்ட பலர் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார்.

மேலும் சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடகேவா, உபுல் கலப்பத்தி, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோரம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்த கையொப்பமிடும் நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பல முக்கியஸ்தர்களும், கலந்துகொண்டிருந்தனர்.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்த இவர்கள் இன்று முதல் உத்தியோகபூர்வமாக குறித்த கூட்டணியில் இணைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *