ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடருக்காக பங்களாதேஷ் செல்கின்றது இந்திய மகளிர் அணி

ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் விளையாடுவதற்காக இந்திய மகளிர் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மூன்று இரவு போட்டிகள் உட்பட 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரமபமாகவுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் செப்டம்பர் மற்றும் ஓக்டோபரில் பங்களாதேஷில் நடைபெறவுள்ள நிலையில் இந்திய மகளீர் அணி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இங்கிய மகளிர் அணி மூன்று முறை பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.