சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் மூன்று போட்டிகளை தவறிவிடும் ஹசரங்க !!

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த வனிந்து ஹசரங்க, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக கடந்த ஆண்டு ஓகஸ்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், மீளப்பெற்றுள்ளதால் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் 1.5 கோடிக்கு வனிந்து ஹசரங்கவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றுக்கொண்டது.

முதல் இரண்டு வாரங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையின்படி, 23 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸை ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது.

இதனை தொடந்து 27 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் 31-ம் திகதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகவும் விளையாடவுள்ளனர்.

இருப்பினும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சில்ஹெட்டில் மார்ச் 22-26 வரையிலும், இரண்டாவது டை மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.

எனவே ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதும் குறித்த மூன்று போட்டிகளிலும் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *