மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வனிந்து ஹசரங்க !!

இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியின் போது நடுவரை விமர்சித்ததற்காக வனிந்து ஹசரங்க மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

ஹசரங்காவின் நடத்தை தொடர்பாக நடுவர், போட்டியின் நடுவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விதிமீறல்களால் ஏற்கனவே டிமெரிட் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் ஹசரங்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பல சர்வதேச போட்டிகளில் இடைநீக்கப்படுவார்.

பங்களாதேஷுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி அடுத்ததாக விளையாடவுள்ளது.

பங்களாதேஷை எதிர்கொள்ளும் இலங்கை டெஸ்ட் அணியில் ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *