டில்ஷான் மதுஷங்க அடுத்த போட்டியில் பங்கேற்கமாட்டார் !!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்த பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க அடுத்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பந்துவீசிய மதுஷங்கவுக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டமை எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம்  தற்போது நடைபெற்று வரும் டாக்கா பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ள லிட்டன் தாஸ் இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில் அதிரடியாக 68 ஒட்டங்களை எடுத்த விக்கெட் காப்பாளர் ஜாக்கர் அலியை அவருக்கு பதிலாக பங்களாதேஷ் அணி சேர்த்துள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி திங்கட்கிழமை சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் நடைபெற உள்ளது.