அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, இலங்கை அணிகள் பங்கேற்கும் U19 மகளிர் முத்தரப்பு தொடர்

இலங்கை, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து U19 அணிகள் விளையாடும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது.

போட்டிகள் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம், GICS, ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மைதாங்களில் நடைபெறவுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் நான்கு T20 ஆட்டங்கள் மற்றும் இரண்டு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளில் இறுதி ஆட்டம் நடைபெறாது என்றும் லீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சம்பியன் பட்டம் வெல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர்கள் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கு மிகவும் அவசியமான அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேலும் உள்நாட்டில் உள்ள இளம் வீராங்கனைகள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் எனவும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *