முதலாவது T-20 : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டி இன்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெறுகின்றது.

ஜூன் மாதம் ஆடவருக்கான T20 உலகக் கிண்ண போட்டி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால் இந்த தொடர் மிகவும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இரு அணிகளும் இதுவரை 4 T20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இலங்கை அணி 3 போட்டிகளிலும் ஆப்கான்சிதான் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ள நிலையில் இலங்கை அணி முதலில் களமிறங்கவுள்ளது.

இலங்கை அணியில் பெத்தும் நிசங்க, குஷால் மெண்டிஸ், தனஞ்செய டி சில்வா, சதீர சமரவிக்ரம, அசலாங்க,மத்தியூஸ், ஷானக, ஹசரங்க, தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, மதீஷ பதிரன இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியில், குர்பாஸ், இப்ராஹிம், நைப், ஒமர்சாய், நஜிபுல்லா, நபி, ஜனத், கைஸ், நூர், ஃபரூக்கி, நவீன் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *