16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு : சமீரவிற்கு பதிலாக பினுர பெர்னாண்டோ அணிக்குள் !!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இலங்கை அணி தொடர்பான விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயமடைந்த துஷ்மந்த சமீர, இருபதுக்கு 20 அணியில் உள்வாங்கப்பட்ட போதும் அவர் காயத்தில் இருந்து மீளாததால் பினுர பெர்னாண்டோ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க தலைமையில இலங்கை அணியில் துணை தலைவராக சரித் அசலங்க செயற்படுவார் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

16 பேர் கொண்ட இலங்கை அணியில் பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் சானக உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் மகேஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, தில்ஷான் மதுஷங்க, நுவன் துஷார, அகில தனஞ்சய, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 போட்டிகள் எதிர்வரும் 17, 19 மற்றும் 21 ஆகிய திகதிகளில் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *