ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவார், – டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங்

CBC TAMIL NEWS : இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பந்த், எதிர்வரும் ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் அணித்தலைவராக செயற்பட்டுவந்த ரிஷப் பந்த், இந்த ஆண்டு ஐபிஎல் முழுவதுமாக விளையாடுவார் என்று நம்புவதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

எனினும், விக்கெட் காப்புக்கான உடற்தகுதி நடைமுறைகளுக்கு திரும்பியுள்ள பந்த், கடந்த சில மாதங்களில் இந்தியாவில் உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

கடந்த 2022 டிசம்பர் 30ஆம் திகதி பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த், கடந்த ஆண்டு ஐ.பி.எல், ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் சில முக்கிய டெஸ்ட் தொடர்களை தவறவிட்டிருந்தார்.

26 வயதான அவர் மீண்டும் திரும்பத் தயாராக இருப்பதாக பொண்டிங் கருதினாலும், விக்கெட் காப்பை தொடருவது அல்லது அணித்தலைவராக செயற்படுவது பற்றியோ எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *