நாடாளுமன்றத்திற்குவர அனுமதிகொடுத்தும் கலந்துகொள்ளாத கெஹலிய

இதேநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் அதனை மறுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று செவ்வாய்கிழமை கையளித்திருந்த நிலையில் அவர் சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இம்யூனோகுளோபுலின் கொள்முதல் ஊழல் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.