கெஹலியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தை கொள்முதல் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனவே இந்த விவகாரம் நீதிமன்றில் இருப்பதாலும் இன்னும் தீர்க்கப்படாததாலும் ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பல தரப்பினரும் அவரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என கோரியதை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனை கூறியுள்ளார்.