பெண்களுக்கான தேசிய சுப்பர் லீக் தொடரை நடத்துகின்றது இலங்கை கிரிக்கெட் சபை

முதல் தடவையாக பெண்ளுக்கான 50 ஓவர் மற்றும் T20 போட்டிகள் கொண்ட தேசிய சுப்பர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இந்த தொடரின் 50 ஓவர் கொண்ட போட்டி இம்மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த தொடரில் கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் காலி ஆகிய நான்கு அணிகள் போட்டியிடவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெறும் இப்போட்டியில் 60 வீராங்கனைகள் விளையாட தகுதி பெற்றுள்ளதாகவும் இதனை தொடந்து T20 போட்டி தொடரும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தேசிய சுப்பர் லீக் போட்டியில் சிறப்பாக செயற்படும் வீராங்கனைகள் தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.