ரச்சின் ரவிந்ரா இரட்டை சதம்: தென்னாபிரிக்கா திணறல்!

நியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடைலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி தற்போது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், தென்னாபிரிக்கா அணி, 431 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

இதன்போது களத்தில், டேவிட் பெட்டிங்ஹாம் 29 ஓட்டங்களுடனும் கீகன் பீட்டர்சன் 2 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமீஸன் 2 விக்கெட்டுகளையும் மெட் ஹென்றி மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

மவுண்ட் மவுங்கானுய்- பே ஓவல் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 511 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரச்சின் ரவிந்ரா 240 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 118 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நெய்ல் பிரண்ட் 6 விக்கெட்டுகளையும் ருவான் டி ஸ்வார்ட் 2 விக்கெட்டுகளையும் டேன் பெட்டர்சன் மற்றும் ட்ஷெபோ மோரேக்கி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா அணி நாளை தொடரவுள்ளது