இந்திய இராணுவ படுகொலையின்  37 ஆவது நினைவேந்தல்

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றிய பணியாளர்கள் உள்ளிட்ட 68 பேரை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் வைத்தியசாலையில் கடமையாற்றிய பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்திருந்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் 37ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நினைவு கூரப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.