இணையவழி மோசடிகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள்

இணையவழி மோசடிகள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் இந்த வருடத்தின் இதுவரையான கால பகுதிக்குள் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சமூக ஊடகங்களில் உள்ள போலிக் கணக்குகள் மூலம் அதிகளவான  இணையவழி மோசடிகள் இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற 8 ஆயிரம் முறைப்பாடுகளில் 200 முறைப்பாடுகள் ஒ.டி.பி. இலக்கங்களுடன் தொடர்புடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்களது இரகசிய இலகங்களை  பல்வேறு நபர்களுக்குப் பகிர்வதாலும் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் தங்களது இரகசிய  இலக்கங்களை எந்த சந்தர்ப்பத்திலும் வேறு நபர்களுக்குப் பகிர வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.