நண்பகல் 12 மணிக்குப் பின்னர் சேவைகள் வழமைக்கு !!

நேற்றிரவு ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்ட போதிலும், இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

சில ரயில் காவலர்கள், சாரதிகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் இன்னும் வேலைக்குச் செல்லவில்லை என்றும் பல ரயில்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் நண்பகல் 12 மணிக்குப் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.