கல்வி நடவடிக்கைகளை தடையின்றி தொடருங்கள் !

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி தொடருமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை தடையின்றி நடத்துமாறு தெரிவித்து அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடசாலை சமூகத்துடன் இணைந்து வேலைத்திட்டம் தயாரிக்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.