யாழில் இருந்து வயாவிளானுக்கு பேருந்து சேவை !!

வலிகாமம் வடக்கு வயாவிளான் ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

கடற்தொழில் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் வயாவிளான் பகுதிக்கு சென்றபோது அப்பகுதி மக்கள் தமது போக்குவரத்து பிரச்சினையை சீர் செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மக்களின் குறித்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரின் பணிப்புக்கமைய வட பிராந்திய போக்குவரத்து சபை அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கமையவே ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த பேருந்து சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லூரி, குரும்பசிட்டி, தெல்லிப்பழை வைத்தியசாலை ஊடாக கே.கே.எஸ். வீதி வழியாக யாழ் நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.