இலங்கையில் கொரோனாவால் பதிவாகிய இரண்டாவது மரணம் : யாழில் சம்பவம்

கடந்த ஒரு வாரத்துக்குள் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான இரண்டாவது மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

குருநாகலையில் கொரோனா தொற்று உறுதியான ஒருவர் கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் யாழிலும் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் இருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டையில் தங்கியிருந்த அவர் காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக சடலத்தை தகனம் செய்யும்மாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.