70 ஈரானிய ஆளில்லா விமானங்கள் வீழ்த்தியதாக அமெரிக்கா அறிவிப்பு

இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட சுமார் 70 ஈரானின் ஆளில்லா விமானங்களை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஊடகமான ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்க கடற்படை கப்பலால் இந்த பொலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க இராணுவ உதவியைத் தவிர, பிரான்சும் உதவியதாக இஸ்ரேல் கூறுகிறது.