ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை !!

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.